Friday, 3 December 2010

கட்டாய மதமாற்றம் செய்ததாக ஒருவர் கைது!

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஜான்சன் (வயது 27) என்பவர பெங்களூரு உல்சூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து துண்டறிக்கை மற்றும் மத நூல்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

உதய்நகரில் உள்ள கிறித்தவ கல்வி நிலைய வளாகத்தில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்த ஜான்சன், தங்கள் பகுதியில் உள்ளவர்களை கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக விசுவ இந்து பரிஷத் கூறுகிறது.

ஒருவர் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய்களை ஜான்சன் கொடுத்தாகவும் கிறித்த மதத்திற்கு மாற பரிந்துரைப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அளித்ததாகவும் காவல்துறையினர் ஜான்சன் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
SOURCE - INNERAM.COM

No comments:

Post a Comment