Monday, 7 March 2011

தோஹா,மார்ச்.7:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் ஏராளமான நாடுகளில் ரகசியமாக நிதியை திரட்டி வருகிறது. பல்வேறு இயக்கங்களின் திரைமறைவில் இத்தகைய நிதித்திரட்டும் பணி நடந்துவருகிறது.

இந்த நிதியெல்லாம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காகத்தான் அவ்வியக்கம் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரபல தலைவரான ஒ.கே.வாசு என்பவர் கத்தரின் பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நிதித் திரட்டுவதாக கத்தரில் வாழும் கேரள மக்கள் புகார் அளித்துள்ளனர்.

வியாபாரிகளிடமிருந்து இவர் வலுக்கட்டாயமாக நிதி திரட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற கேரள சட்டமன்றத் தேர்தலில் குஞ்சுபரம்பு என்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் பரிசீலனைக்குரிய நபராக இவர் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இவர் கத்தருக்கு நிதித்திரட்டுவதற்காக வருகைபுரிந்தார். அப்பொழுது எதிர்ப்பு கிளம்பியதால் நிதித்திரட்டுவதை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.
செய்தி:பாலைவனதூது

No comments:

Post a Comment