Tuesday, 2 November 2010

ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் சகோதர அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகள்: காங்கிரஸ்


ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகள் பயங்கரவாத  சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன  என காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்துள்ள புலனாய்வு விசாரணை முடிவுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பயங்கரவாத   செயல்களில் ஈடுபட்டது புலனாய்வு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட முனையும் இது  போன்ற தீய செயல்களுக்கு எதிராக காங்கிரஸ் முழு முயற்சியுடன் போராடும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment