Monday, 25 October 2010

பாஜக எம்.எல்.ஏ க்களின் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிரடி சோதனை!

கர்நாடக மாநிலத்தின் 60 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில் பெரும்பாலான இடங்கள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களாகும். கர்நாடக மாநில பாஜக அரசு ஆபரேசன் தாமரை மூலம் எதிர் கட்சி எம்.எல்.ஏ க்களை ராஜினாமா செய்ய வைத்து தன் அரசை காப்பாற்ற முயன்று வருகிறது.

இதன் எதிரொலியாக இது வரை காங்கிரசை சேர்ந்த இருவரும், மத சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ஒருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 25 கோடி முதல்  ரூ 50  ௦ கோடி வரை பேரம் பேசுவதாக எதிர்க் கட்சிகள் பாஜக மேல் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மற்றும் ஹாஸ்பெட் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment