Saturday, 30 October 2010

எட்டாம் வகுப்பு மாணவியை வன்புணர்ச்சிச்செய்த பூஜாரிக்கு ஏழு ஆண்டு சிறை

புதுடெல்லி,அக்.30:எட்டாம் வகுப்பு மாணவியை ஒன்பது மாதங்களாக வன்புணர்ச்சிச் செய்த கோயில் பூஜாரியை ஏழு ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம்.


ஒரு கோயிலில் பூஜாரியாக பணியாற்றிய பிரேம்பிரசாத் என்பவரைத்தான் அடிசனல் செசன்ஸ் நீதிபதி சஞ்சீவ் அகர்வால் 7 ஆண்டு கடின சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் தெளிவுள்ளதாகவும், நம்பமுடியாதது எதுவும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நரேலாவில் கோயிலுக்கு சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை வன்புணர்வுக்கு ஆளாக்கினார் பூஜாரி.
செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ் - 


No comments:

Post a Comment