Saturday, 30 October 2010

தாக்குதலுக்கு தயாரகும் முன்பு இஸ்ரேல் பல தடவை ஆலோசித்துக் கொள்ளட்டும் - ஹமாஸ்

காஸ்ஸா,அக்,30:காஸ்ஸாவின் மீது மீண்டுமொரு தாக்குதலுக்கு முற்பட்டால் அதன் முழுமையான பலனை அனுபவிக்க வேண்டிவரும் என மூத்த ஹமாஸ் தலைவர் மஹ்மூத் ஸஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் நுழையுமானால் அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும். அவர்களுடைய லட்சியம் நிறைவேறாது. இராண்டாவது போருக்கு முன்னால் பல முறை அவர்கள் ஆலோசிக்க வேண்டும். என மஹ்மூத் ஸஹர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய அக்கிரம தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1400 பேர் கொல்லப்பட்டனர்.

யூதக் குடியேற்றம் தொடர்பாக சமீபத்தில் எல்லையில் மோதல் அதிகரித்து வருகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்  


No comments:

Post a Comment