Thursday, 14 October 2010

கஷ்மீரில் மீண்டு ஊரடங்கு உத்தரவு

ஸ்ரீநகர்,அக்.13:கஷ்மீரில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்யத் அலிஷா கிலானியின் தலைமையிலான ஹுர்ரியத் மாநாட்டுக்கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து திங்கள் கிழமை இரவில் ஸ்ரீநகர் உள்ளிட்ட சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிலானியை வீட்டுக் காவலில் வைத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்ரீநகரில் ஹைதர் புராவில் அமைந்துள்ள அவருடைய வீட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக ஹுர்ரியத் அறிவித்துள்ளது.

செய்தி : பாலைவனத் தூது

No comments:

Post a Comment