Thursday, 20 January 2011

அரசுப் பேருந்தில் கிடந்தது இளம்பெண் தலை; குழந்தை உடல்

சங்கராபுரம் அரசு போக்குவரத்துக்கழக பேருந்தில் பயணப் பை ஒன்றில் இளம்பெண் தலையும் ஒரு வயதுப் பெண் குழந்தையின் உடலும் கிடந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து சேலம் வந்து, அங்கிருந்து அதிகாலை 5 மணிக்கு சங்கராபுரம் வந்த அந்தப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்தது அனதப் பயணியர் பை (BஆG). அதைப் பணிமனைக் காவலர் தேவராஜனிடம் ஓட்டுனர் மொட்டையனும், நடத்துனர் கணேசனும் ஒப்படைத்தனர்.
ஒரு நாள் முழுதும் அந்தப் பையைத் தெடி யாரும் வராததாலும், அதிலிருந்து துர்நாற்றம் வந்ததாலும், காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 
அதன்பின் காவல்துறையினர் அந்த 'பேக்கை'த் திறந்துப் பார்த்ததில், அதனுல் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் தலையும், ஒரு வயதுப் பெண் குழந்தையின் உடலும் காணக்கிடைத்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.
செய்தி :பாலைவனதூது
 

No comments:

Post a Comment