Thursday, 13 January 2011

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) - கிளை கூட்டம்

SDPI-யின் புதுவலசை கிளைகூட்டம் ஞாயிற்றுகிழமை புதுவலசையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு SDPI-ன் புதுவலசை தலைவர் சகோதரர். அபுரார் அஹமது அவர்கள் தலைமை வகித்தார். நகர் மன்ற தலைவர் ஜனாப். பஜல் ரஹ்மான், ஹாஜி அப்துல் ரஜாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடனை தொகுதி கமிட்டி உறுப்பினர் சகோதரர். சலீம் அஹமது BBA., அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் SDPI-யின் கொடியேற்று நிகழ்சியை சிறப்பாக நிரைவேற்றுவது.

 மேலும் சித்தார்கோட்டை முதல் ஆற்றங்கரை வரையிலான மோசமடைந்த சாலையை சீரமைக்ககோரி ஆற்றங்கரை முதல் சித்தார்கோட்டை வரை உள்ள அனைத்து கிளைகலையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது எனவும், நமது ஊரில் உள்ள பழுதடைந்த தொலைபேசி இணைப்புகளை உடனடியாக சரிசெய்ய வலியுருத்துவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கிளை துணை தலைவர் சகோதரர். ஜியாவுர் ரஹ்மான், கிளை துணைதலவர். சகோதரர். அப்துல் ஒபூர் B.E., மற்றும் செயர்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஜனாப். அஸ்வர் ரஹ்மான் DHMCT., அவர்கள் நன்றிஉரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment