
ஆப்கன் தாலீபான்களின் தலைவரான முல்லா முகம்மது உமர் உலகளவில் முக்கியமான தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு அமெரிக்காவால் தேடப்பட்டு வருபவர். இவர் ஆப்கானிஸ்தானில் பிறந்தவரவார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலையடுத்து இவர் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர். சமீப காலமாக அவரை பற்றி தகவல்கள் இல்லை.
இந்நிலையில் முல்லா முகம்மது உமருக்கு கடந்த 7ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முல்லா உமரை குறித்து வெளியான இந்த செய்தி அடிப்படையில்லாத ஆதாதரமற்ற செய்தியாகும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செய்தி:பாலைவனதூது
No comments:
Post a Comment