Friday, 21 January 2011

பாபர் மசூதி தீர்ப்பு & தேசிய அவமானம்-கருத்தரங்கம்


திருச்சியில் ஜனவரி 16, அன்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சி தமுமுக குத்பிஷா நகர் கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மதிமுக மாநில மாணவரணி செயலாளர் கங்கைச் செல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க அரங்கிற்குள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அரங்கிற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் வெண்திரையில் நிகழ்ச்சிகளை கவனித்தனர்.


இது அற்புதமான முன்முயற்சி என தமிழ் தேசிய சிந்தனையாளர்களும், திராவிட இயக்கத் தோழர்களும், சமய நல்லிணக்க நண்பர்களும் பாராட்டினர். கிளை நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் கருத்தரங்கை பெரியளவில் வெற்றிபெறச் செய்திருக்கிறது.
 

 

 

 

செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ் 

No comments:

Post a Comment