
ஆத்தூர் தலைவாசல் பகுதியில் ரதயாத்திரை மேற்கொண்டு வரும், பாஜக தமிழக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தான் ரதயாத்திரையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். ரதயாத்திரையின் போது பேட்டியளித்த அவர் தமிழகத்தில் 5வது முறையாக தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் என கருணாநிதி கூறி வருகிறார்.
எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட தயாரா. ஆனால் பாஜக தனித்து போட்டியிடும் அதுபோல் தி.மு.க., வும் காங்கிரசுடன் கூ்டடணியில்லாமல் தனித்து போட்டியிட முடியுமா. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மாஜி அமைச்சர் ராஜாவுக்கு 10 சதவீதமும், கருணாநிதி குடும்பத்துக்கு 30 சதவீதமும், சோனியா குடும்பத்துக்கு 60 சதவீதமும் பணம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடே நடக்கவில்லை என முதல்வரும், காங்கிரஸ் கட்சியும் கூறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தமிழக மீனவர்கள் பேராசையின் காரணமாக இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதால் தான் உயிரிழப்பை சந்திப்பதாக முதல்வர் பிரசாரம் செய்கிறார், உண்மையில் அவர் தான் பேராசையின் பிடியில் இருக்கிறார்.
நாட்டில் விலைவாசி உயர்வு பெரும் பிரச்னையாக இருக்கிறது. விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினால் தினம் ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இருப்பினும் இப்பிரச்னையை முன் நிறுத்தி வருகிற 29ம் தேதியன்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும். என்று பொம் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
செய்தி :இந்நேரம்
No comments:
Post a Comment