Saturday, 30 April 2011

தாக்குதலை மீண்டும் வலுப்படுத்துவோம் தாலிபான் எச்சரிக்கை

taliban
காபூல்:ஆப்கானிஸ்தானில் முக்கிய இடங்களில் மீண்டும் தாக்குதலை வலுப்படுத்தப்போவதாக தாலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ’பத்ர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் அலுவலகங்கள், ராணுவ மையங்கள்,விமானப்படை மையங்கள், ஆயுத கிடங்குகள், மக்கள் திரளும் இடங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும்.

இத்தாக்குதல் மூத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆக்கிரமிப்பு படையினருக்காக பணியாற்றுபவர்கள், வெளிநாட்டு கம்பெனிகளின் தலைவர்கள் ஆகியோரை குறிவைத்து நடத்தப்படும் என தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதிகமான சேதங்கள் ஏற்படுவதை தடுக்க மக்கள் எதிரிகளின் மையங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தாலிபான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 ஆனால், தாலிபானின் தாக்குதல்கள் ஒருவாரமே தொடரும் எனவும், இத்தாக்குதல் வெற்றிப்பெறாது என நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தாலிபானின் புதிய முன்னேற்றங்கள் குறித்து ஹிலாரி கிளிண்டனும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஹிலாரியின் இவ்வறிவிப்பு அமெரிக்கா முன்னர் அறிவித்ததை விட அதிக காலம் அந்நிய படையினர் ஆப்கானில் தங்குவதற்கான தந்திரமாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஆப்கானில் தற்போது ஒன்றரை லட்சம் அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் உள்ளனர்.ஆனால்,முந்தைய வருடங்களை விட தற்போது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

அச்சமின்றி செயல்படுங்கள்:சி.பி.ஐக்கு பிரதமர் உபதேசம்

Chidambaram
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம்,காமன்வெல்த் போட்டிகள் ஆகிய ஊழல் வழக்குகளை விசாரித்துவரும் மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐக்கு அச்சமின்றி செயல்பட பிரதமர் உபதேசித்துள்ளார்.

புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐயின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைத்து பேசிய பிரதமர் கூறியதாவது:2ஜி அலைக்கற்றை,காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்குகளை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய மன்மோகன்சிங், இந்த வழக்குகள் உங்களுக்கு பெரிய சோதனை. சிபிஐ மேற்கொள்ளும் வழக்குகளை அச்சமின்றி, சார்பு தன்மை இல்லாமல் விசாரிக்க வேண்டும்.

 யார்-யார் தவறு செய்துள்ளார்களோ அவர்கள் மீது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரணைக்குள்படுத்த வேண்டும். அவர்கள் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது. தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். முறைகேட்டில் சிக்கியவர்கள் யார் என்று பார்க்காமல் அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். இதில் விமர்சனத்துக்கு இடமளிக்காமல் விசாரிக்க வேண்டும்.

 சிபிஐ இப்போது மிக முக்கிய ஊழல் வழக்குகளை விசாரித்து வருகிறது. இதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது நேர்மையான விசாரணை, விரைவான முடிவைத்தான். எனவே விசாரணைக்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்ட வேண்டும். இதில் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் பணிந்துவிடக்கூடாது. நமது சமுதாயம் திறந்த, வெளிப்படையான சமுதாயம். எல்லாப் பிரச்னைகளிலும் பல கருத்துக்கள், நோக்கங்கள் இருக்கும். எது சரியோ அதை சிபிஐ எடுத்து செயல்பட வேண்டும்.

 இதில் முக்கிய கவனத்தை சிபிஐ செலுத்த வேண்டும். ஏனெனில் இது பதற்றமான பிரச்னையாகும். இந்த நாட்டின் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்களது பணிகளை செவ்வனே செய்வோரை துன்புறுத்தக்கூடாது. பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படக்கூடாது.

இதுபோன்ற விசாரணைகளில் அப்பாவிகள் எந்தவகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. தவறு செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இருக்கும் ஒரே வழி விசாரணைதான். அந்த விசாரணை நேர்மையாக, அப்பாவிகள் பாதிக்கப்படாதவகையில் இருக்க வேண்டும்.

 சிபிஐயிடம் இப்போது ஏராளமான வழக்குகள் வந்து குவிந்துள்ளன. அந்த வழக்குகளை விசாரிக்க 71 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அவற்றில் 64 நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டன. மற்ற நீதிமன்றங்களுக்கு அனுமதி அளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தவகையில் மாநில அரசுகள் சிறப்பு நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி இதில் கவனம் செலுத்தவேண்டும்.

 சிபிஐ சுதந்திரமாக, விரைவாக செயல்பட அனைத்து அடிப்படை வசதிகள், தேவையான ஊழியர்கள் ஒதுக்கப்படுவர். இது சுதந்திரமான அமைப்பு. மற்ற விசாரணை அமைப்புகளுக்கு சிபிஐ முன்னோடியாக உள்ளது. அதன் தரம் விசாரணை மூலம் வெளிப்பட வேண்டும் என்றார் பிரதமர்.

 விழாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 186 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் 11 மாடிக்கட்டிடமாக சி.பி.ஐ தலைமையகம் கட்டப்பட்டுள்ளது.

அருணாச்சல் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

ArunachalCM_SL_30_04_2011
இட்டாநகர்:அருணாச்சல முதல்வர் தோர்ஜி கண்டு உள்ளிட்ட ஐந்து பேர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது.தவாங்கிலிருந்து நேற்று காலை 9.56 மணியளவில் முதல்வருடன் ஹெலிகாப்டர் தலைநகர் இட்டாநகருக்கு பறந்தது.ஹெலிகாப்டர் புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் ஸெலாபாஸ் பிரதேசத்தின் வான் பகுதியில் வைத்து ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு அறுந்துபோனது.

விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் தேடுதலில் ஈடுபட்டபோதும் மோசமான வானிலையை தொடர்ந்து திரும்பியதாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ரஞ்சீவ் ஸாஹு தெரிவித்துள்ளார்.காணாமல் போன ஹெலிகாப்டரை ராணுவத்தால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.தரைப்படை மற்றும் விமானப்படையினரும், மாநில போலீசாரும் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டி.ஐ.ஜி ராபின் ஹிபு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,தாபோரிஜோ கிராமத்தில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஜெனரல் ஜே.ஜே.சிங்கும்,முதல்வரின் அலுவலகமும் ராணுவத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது.

 ஹெலிகாப்டர் பின்னர் பூட்டானில் தரையிறங்கியதாக பின்னர் முதல்வரின் அலுவலகம் தெரிவித்தது.ஆனால், தங்களுடைய பிரதேசத்தில் ஹெலிகாப்டர் இறங்கவில்லை என பூடான் அறிவித்துள்ளது.இதனால் பீதி ஏற்பட்டுள்ளது.காணாமல்போன ஹெலிகாப்டரை தேடும் பணி தொடர்வதாக மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அறிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரை இதுவரை கண்டறிய இயலவில்லை என அருணாச்சல் மாநில அரசும் அறிவித்துள்ளது.காணாமல்போன ஹெலிகாப்டரில் முதல்வருடன், தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி யெஷி லாமு, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி யெஷி சொடாக், கேப்டன்களான ஜெ.எஸ்.பப்பர், கெ.எஸ்.மலிக் ஆகியோர் பயணித்துள்ளனர்.

 கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் தவாங்கின் மலைப்பிரதேசத்தில் ஒரு பவன்ஹான்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 17 பேர்கொல்லப்பட்டிருந்தனர்.கடந்த மாதம் காங்டோக்கில் நடந்த மற்றொரு விபத்தில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்து நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

 ஒரு வருடத்திற்கு முன்புதான் ஆந்திரமாநில முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடாபியின் இளைய மகன் கொல்லப்பட்டார்!

235892-gadafi
நேட்டோ படைகள், லிபிய அதிபர் கடாபியைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில், கடாபியின் மகன் மற்றும் பேரக்குழந்தைகள் பலி ஆயினர். எனினும், அதிபர் கடாபி இந்த தாக்குதலில் இருந்து தப்பினார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இது நேட்டோ நாடுகளின் போர்க்குற்றம் என்றும் லிபியா தெரிவித்து உள்ளது.

இது குறித்து இன்று லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராகிம் விடுத்துள்ள அறிக்கையில், நேட்டோ நாடுகளின் படைகள் நடத்திய வான்தாக்குதலில், அதிபர் கடாபியின் மகனான செய்ப்-அல்-அராப் கொல்லப்பட்டதாகவும், மேலும் கடாபியின் பேரக்குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் இறந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தாக்குதல் நடக்கும் பொழுது கடாபியும், அவரது மனைவியும், தங்கள் மகனின் இல்லத்தில் இருந்ததாகவும், எனினும் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் இருவரும் பத்திரமாக வெளியேறியதாகவும் கூறியுள்ளார். செய்ப், கடாபியின் மகனாக இருந்தாலும், லிபிய ராணுவத்திலோ, அரசிலோ அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அவர் மீதான தாக்குதல் நேட்டோ படைகளின் போர்க்குற்றம் என்றும் கூறியுள்ளார் இப்ராகிம்.

34,343 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸி​னால் இந்தியாவில் நடத்தப்படு​கிறது

Ekal_Vidyalaya_Logo
ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது.

ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.

1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 34000 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 10,00,000 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை ‘சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்’ (அறிவுமிக்க, ஆரோக்கியமான, மற்றும் வளமான(!!!)) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஒரு இலட்சம் கிராமங்களை 2015க்குல் சென்றடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.

சங் பரிவார அமைப்புக்கு 2006 ஆம் ஆண்டு  2 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது  ஏகல் வித்யாலயா.அமெரிக்க அதிபர பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் ஏகல் வித்யாலயா என்ற  சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம் பெற்றிருக்கிறார் என சர்ச்சை கிளம்பியது.

வெளிநாட்டு நிதி:

யு.எஸில் இவ்வமைப்பு வேகமான முறையில் நிதி சேகரிக்கிறது.ஜூலை 2009 ஆம் ஆண்டு சிகாகோவில் 160000 டாலர்  நிதி சேகரித்தது.செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு சான் டிக்கொவில்  கலாச்சார  நிகழ்ச்சி மூலம் 14000 டாலர்  கொடுத்துள்ளது.மே 2010ல், 600 பேர் கலந்துக் கொண்ட சிகாகோ நிகழ்ச்சியில் 82525 டாலர் சேகரித்தது.

அதே மாதத்தில் மத்திய அட்லாண்டிக் பகுதியில்,500,000 டாலர் ஐந்து கருணை இல்லம் மூலம்   நிதி சேகரித்தது.85 பள்ளிகளை 2004 மற்றும் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள அமைப்பு தத்து எடுத்துள்ளதுதேசிய இந்து மாணவர் அமைப்பு (UK) வெளிநாட்டு நிதி திரட்டலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

குடியரசு தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியில்​லை : பிரதீபா பட்டீல்

Pratibha
புதுடில்லி:தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் தேதி பதவி ஏற்ற இவர் இந்தியாவின் 12 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவி வகித்தார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

அடுத்த ஆண்டு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?” என்று பிரதீபா பட்டீலிடம் நேற்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், நான் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இஸ்லாமிய வங்கி முறை குறித்து கருத்தரங்கு

MALAYSIA-FRANCE-ECONOMY-ISLAM
போபால்  :உலக பொருளாதார பிரச்சனை மற்றும் இஸ்லாமிய வங்கி முறை குறித்த கருத்தரங்கு வருகின்ற ஞாயறு அன்று மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற உள்ளது.இந்த கருத்தரங்கு முஸ்லிம் கல்வி சமூகம் மற்றும் கலாசார கழகமும் அரபி மற்றும் ஆங்கில கல்வி தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.
 

இந்த கருத்தரங்கில் பிரபல ஷிரியா ஆலோசகர் இர்பான் ஷாஹித் மற்றும் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் பொது செயலாளர் மெளன வலி ரஹ்மானியும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

 பேராசிரியர் ஷாஹித் அவர்கள் ஐரோப்பாவில் உள்ள பல மேலாண்மைக் கல்லூரிகளுக்கு  வருகைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. ஷாஹித் அவர்கள் பொருளியல் சார்ந்த நிறைய நூல்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என முஸ்லிம் கல்வி சமூகம் மற்றும் கலாசார கழகம், அரபி மற்றும் ஆங்கில கல்வி தொண்டு நிறுவனத்தின் போபால் செயலாளர் பர்வேஸ் பாரி தெரிவித்துள்ளார்.

எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி மீது துப்பாக்கிச்சூடு-கவலைக்கிடம்

Akbar_Owaisi_(6)
ஹைதராபாத்:ஆந்திரபிரதேச மாநிலத்தில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்பருத்தீன் உவைஸி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கவலைக்கிடமான அக்பருத்தீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சட்டமன்றத்தொகுதியில் சந்திரயானா குட்டாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்புவேளையில் 4 மர்ம நபர்கள் அக்பருத்தீன் உவைஸியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.உவைஸியுடன் சென்ற இன்னொரு எம்.எல்.ஏவான அஹ்மத் பலாலாவுக்கும் துப்பாக்கிச்சூட்டில் காயமேற்பட்டது.

 மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ பதவியை வகிக்கும் அக்பருத்தீன் உவைஸிக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.வாகனத்தை பெரும்பாலும் அக்பருத்தீன் உவைஸிதான் ஓட்டுவார்.ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்தான் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராக அக்பருத்தீன் உவைஸி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.எம்.எல்.ஏ பலாலாவின் மெய்க்காப்பாளர் திரும்பிச்சுட்டதில் தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஒருவருக்கு காயமேற்பட்டதாக கூறப்படுகிறது.

 இச்சம்பவத்தைத்தொடர்ந்து ஆந்திரமாநில முதல்வர் உயர்மட்டக்கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.உள்துறை அமைச்சர் பி.ஸபீதா இந்திர ரெட்டி, டி.ஜி.பி.கெ.அரவிந்த ராவ், கூடுதல் டி.ஜி.பி(உளவுத்துறை) எம்.மஹேந்தர் ரெட்டி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

 முதல்வர், உள்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உவைஸியை சந்தித்தனர்.உவைஸி அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.உவைஸியின் உடலிலிருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.

 நகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வியடைந்ததாக குற்றஞ்சாட்டி மாநகர போலீஸ் கமிஷனர் எ.கெ.கானை எம்.ஐ.எம் உறுப்பினர்கள் கெரோ செய்தனர்.அக்பருத்தீன் உவைஸி எம்.ஐ.எம். தலைவர் சுல்தான் ஸாலாஹுத்தீன் உவைஸியின் மகனாவார்.தற்போது எம்.ஐ.எம் கட்சியின் சட்டமன்றத்தலைவராகவும் உள்ளார்.

இராக்கில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடு

iraq_big
பாக்தாத்  : ஈராக்கின் பாராளமன்ற உறுப்பினர்கள் சதாம் ஹுசைனின் படையால் 1990 மற்றும் 1991 ற்கும் இடையில் நடந்த வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடாக அமெரிக்க டாலர் 400 மில்லியன் வழங்க அனுமதி அளித்துள்ளது.இழப்பீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வாஷிங்டன்னிற்கும் பாகத்திற்கும் இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்மீது சட்டம் ஏற்றும் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 226 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் இழப்பீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
 

இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளமன்ற உறுப்பினர் மொக்டதா அல் சதர் பாராளமன்றதிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஈராக் கடந்த 1990 ஆகஸ்ட் 2 ஆம் தேதி தனது அண்டை நாடான குவைத் மீது போர் தொடுத்தது. ஆனால் சர்வதேச ராணுவத்தின் தலை ஈட்டால் ஈராக் ராணுவம் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.   

 அமெரிக்க கூட்டுப்படையின் போர்தொடுப்பல் கடந்த 2003        ஆம் ஆண்டு சதாம் ஹுசைனின் ஆட்சி முடிவுக்கு வந்தது.குவைத் போர் நடைபெற்ற சமயம் அமெரிக்க மக்கள் சிலரை சதாமின் ராணுவம் மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் மேலும் அதில் சிலர் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் கூறி அவர்களுக்கு இழப்பீடு வழங்க அந்நாட்டு பாராளமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க கூட்டு படை உலக நாடுகளின் எதிர்ப்பையும் ஐநாவின் கனடனதையும்  மீறி இராக்கில் அத்துமீறி நுழைந்து சதாமின் ஆட்சியை கைப்பற்றியது.மேலும் இராக்கில் அமெரிக்க கூட்டு படைகளால் கொல்லப்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களுக்கு இதுவரை ஈராக் அரசு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் ஆகும்.மேலும் ஈராக் மக்கள் அமெரிக்க கூட்டு ராணுவத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆப்கானில் நிலைமை மோசம்:அமெரிக்கா

afghanistan military
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதன் முன்னோடியாக அமெரிக்க காங்கிரஸிற்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஏழு பகுதிகளின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் படையிடம் ஒப்படைக்கப்படும். திடீரென தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஸ்திரமற்ற நிலைதான் ஆப்கானில் தற்போது நிலவுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.

ஆறுமாதத்திற்கிடையே அமெரிக்க-ஆப்கான் ராணுவத்தினரால் போராளிகளுக்கெதிராக வலுவான நடவடிக்கை மேற்கொள்ள சாதித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைப்போம் என அமெரிக்கா அறிவித்த பிறகு நாட்டில் ராணுவத்தின் மீதான தாக்குதல் அதிகரித்து ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மக்கள் கொந்தளிப்பில் சிரியாவின் நகரங்கள்

friday protest
டமாஸ்கஸ்:தலைநகரான டமாஸ்கஸ் உட்பட சிரியாவின் நகரங்களில் அரசுக்கெதிரான போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பொழுது வீதிகளெல்லாம் மனித வெள்ளத்தால் மிதந்தன. கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்காக ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பிரார்த்தனைக்கு பிறகு 1963-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் பஆஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் பெருமளவில் திரண்டனர்.

அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுப்பினர். தராவில் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் களமிறங்கினர். சிரியா புரட்சி 2011 என்ற பேஸ் புக் பக்கத்தில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு போராட்டத்தை வலுப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தரா நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நகரத்தின் சுற்றுமுள்ள பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட போராட்டம் நடைபெற்றது.

அதே வேளையில், சிரியாவில் அரசுக்கெதிரான போராட்டத்திற்கு பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ள இஃவானுல் முஸ்லிமீன் களமிறங்கியுள்ளது.’இறைவன் மிகப்பெரியவன்! சுதந்திரத்திற்காகவும், கண்ணியத்திற்காகவும் நடக்கும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி! என இஃவான்களின் தலைமை கூறியதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆறுவாரங்களை தாண்டியுள்ள சிரியாவின் மக்கள் எழுச்சிப்போராட்டத்திற்கு முதன்முறையாக இஃவானுல் முஸ்லிமீன் பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.நா மனித உரிமை குழு ஜெனீவாவிலும், ஐரோப்பா யூனியன் ப்ரஸ்ஸல்ஸிலும் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளன.

எகிப்து ரஃபா எல்லையை திறக்கிறது

border
கெய்ரோ:இஸ்ரேல் விதித்துள்ள தடையால் துயரத்தை அனுபவிக்கும் காஸ்ஸாவின் எகிப்திய எல்லையான ரஃபா உடனடியாக திறக்கப்படும் என எகிப்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் நபீல் அல் அரபு தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்தார்.

காஸ்ஸா மீதான தடையை நீக்குவதற்குரிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ரஃபா எல்லையை நிரந்தரமாக திறந்து விட தீர்மானித்துள்ளோம். எல்லையை மூடுவது மோசமான நடவடிக்கை என நபீல் அல் அறபி கூறினார்.

அதேவேளையில், எகிப்தின் நடவடிக்கை கவலையை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடக்கு சினாயில் ஹமாஸ் ஏற்படுத்தியுள்ள ராணுவ வசதிகள் எல்லையை திறப்பதன் மூலம் வலுவடையும். ஈரான், ஹமாஸ் ஆகியவற்றுடனான எகிப்தின் உறவை புனரமைப்பது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் அதிகாரி கூறுகிறார்.

2006-ஆம் ஆண்டு காஸ்ஸாவின் மீது தடையை ஏற்படுத்தியது இஸ்ரேல். தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த தடை வலுவடைந்தது. ரஃபா எல்லையில் சுரங்கத்தை அமைத்து பலஸ்தீன் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை சேகரித்தனர்.

துனீசியா மீது கத்தாஃபியின் ராணுவம் தாக்குதல்

tunisia
துனீஸ்: கத்தாஃபியின் ராணுவம் துனீசியாவின் எல்லை நகரமான தஹிபாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு துனீசியா ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தில் தற்போது லிபியா நாட்டுக்கொடி பறப்பதாகவும், ஆனால், எந்த நேரத்திலும் துனீசியா ராணுவம் வலுவான பதிலடி கொடுக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்தாஃபி ராணுவத்தின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் மத்திய தஹிபாவில் ஒரு பெண் கொல்லப்பட்டார். ஒரு ஆண் குழந்ந்தையின் காலில் குண்டடிப்பட்டது. எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து லிபியா ராணுவம் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

வியாழக்கிழமை நகரத்திலிருந்து வெளியேறிய ராணுவம் திரும்பி வர துனீசிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே கத்தாஃபி ராணுவத்தின் எட்டு வாகனங்களை துனீசியா கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே, லிபியாவில் மோதல் வலுவடைந்த சூழலில் வெளிநாட்டினர் உள்பட துனீசியாவின் எல்லை வழியாக தப்பினர்.

அதேவேளையில், மிஸ்ருத்தாவில் கத்தாஃபி ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டனர் .இந்நகரத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைக் குறித்து விசாரணை நடத்தப்படும் ஐ.நா சிறப்புக்குழு கூறியுள்ளது.

சூறாவளி:அமெரிக்காவில் மரணம் 313 ஆக உயர்வு

வாஷிங்டன்:தென் அமெரிக்காவில் பல நாட்களாக தொடர்ந்து வீசும் புயல் காற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. சூறாவளியினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ள அலபாமா மாநிலத்திற்கு செல்வேன் என அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர உதவி வழங்கப்படும் என அதிபர் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அலபாமா, மிசிசிபி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளோரிடாவில் எண்டோவர் ஸ்பேஸ் செண்டருக்கு செல்லும் வழியில் ஒபாமா அலபாமாவுக்கு செல்வார்.

அலபாமா ஆளுநர் உள்பட உள்ளூர் அதிகாரிகளையும் ஒபாமா சந்தித்து நிலைமைகளை குறித்து ஆராய்வார். அலபாமாவில் மொத்தம் 131 பேர் மரணித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ரோபர்ட் பென் தெரிவிக்கிறார். 60 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அவர் தெரிவிக்கிறார். மிசிசிபியில் 32 பேர், டென்னீஸில் 30 பேர், அர்கன்ஸாஸில் 11 பேர், ஜார்ஜியாவில் 14 பேர், விர்ஜீனியாவில் எட்டுபேர், லூதியானாவில் இரண்டுபேர் மரணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெருமளவிலான இழப்பை ஏற்படுத்திய கத்ரினா புயலுக்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவில் தற்போது கடுமையான புயல் வீசுகிறது.

இனப்படுகொலை:சஞ்சீவ் பட்டிற்கு அளித்த பாதுகாப்பு வாபஸ்

sanjeev pat
குஜராத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குஜராத் போலீஸ் திரும்பப பெற்றுக் கொண்டுள்ளது.

2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்த நடந்த வன்முறைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கிருப்பதாக  உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அவர் தனது பிரமாண பத்திரத்தில், “2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரங்கள் குறித்து முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அதில் நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, இந்துக்கள் தங்களது கோபத்தை காட்ட அனுமதிக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கினார்’என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால் தான் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு பரிந்துரைத்தது. எனினும் மாநில அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்காமல் 5 போலீஸாரை அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தது.

இந்நிலையில் அந்த பாதுகாப்பும் வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை மாநில காவல்துறை இயக்குநர் பிறப்பித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் பட், இது இரண்டாவது முறையாக எஸ்.ஐ.பியின் சிபாரிசை மீறி பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். என்னைக் குறித்து கவலையில்லை. எனது குடும்பத்தின் பாதுகாப்பு புனரமைக்கப்பட வேண்டும் என்றார்.

மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததைத் தொடர்ந்து குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தும் நானாவதி கமிஷன் சஞ்சீவ் பட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினைக் குறித்து சஞ்சீவ் பட் விவரிக்க வருகிற மே-16-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது-உச்சநீதிமன்றம்

mathaani
புதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.

இதனை புரிந்துக்கொள்ள வழக்கின் விளக்கமான விபரங்களுக்கு உள்ளே செல்ல வேண்டிய தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், இவ்விவகாரத்தில் தீர்மானம், இரு கட்சிதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகே அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வருகிற மே மாதம் நான்காம் தேதி ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் கைது செய்து சிறையிலடைப்பது நீதியல்ல என அப்துல் நாஸர் மஃதனிக்காக வாதாடிய வழக்கறிஞர் சாந்திபூஷன் தெரிவித்தார். எனது கட்சிதாரர் எட்டு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கர்நாடகா போலீஸ் தாக்கல் செய்த முதல் இரண்டு குற்றப்பத்திரிகைகளில் அப்துல்நாஸர் மஃதனியின் பெயர் இல்லை.

இத்துடன் அவருடைய ஆரோக்கிய நிலையையும் பரிசீலிக்கவேண்டும். சாந்தி பூஷனின் வாதத்தை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், அப்துல் நாஸர் மஃதனியின் உடல் ஆரோக்கிய பிரச்சனையையும், ஒரு காலை இழந்து சக்கர நாற்காலியை பயன்படுத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியது.இதனை எதிர்த்த கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும், ஒரு கால் இல்லாததும் சதித்திட்டத்தில் பங்கேற்க மஃதனிக்கு தடையாக இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

இச்சூழலில்தான் மஃதனி எகிப்திற்கு சென்றுள்ளார். குடகு, சூரத், அஹ்மதாபாத் ஆகிய இடங்களுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். இது அவருக்கு பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள் ஒன்றுமில்லை என்பதற்கான ஆதாரம் என ஜெயின் கூறினார். ஆனால், மஃதனியின் ஆரோக்கிய பிரச்சனைகள் சாதாரணமானதல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் அப்துல்நாஸர் மஃதனிக்கு ஜாமீன் அனுமதித்து விடும் என்பது உறுதியானவுடன் கர்நாடகா அரசுதரப்பு வழக்கறிஞர் மீண்டும் விசாரணையில் இடைமறித்தார்.

நாடு முழுவதும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சூரத்திலும், அஹ்மதாபாத்திலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றிற்கும் கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் தொடர்புள்ளது  என சந்தேகிப்பதாகவும் ஜெயின் கூறினார். தங்களின் பிரமாணப்பத்திரத்தை வாசித்த பிறகே இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டுமெனவும், ஜாமீன் மனு மீதான விசாரணையை இரண்டுவாரத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனவும் ஜெயின் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அப்துல்நாஸர் மஃதனியை இனிமேலும் சிறையிலடைத்திருப்பது சரியல்ல. அவருக்கு விரைவாக ஜாமீன் அளிக்க வேண்டும் என சாந்திபூஷன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசின் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பிக்கவும், செவ்வாய்க் கிழமை இதற்கான அப்துல் நாஸர் மஃதனியின் பதிலை பைல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெஸ்ட் பேக்கரி வழக்கு:யாஸ்மின் ஷேக்கும் பல்டி

best bakery
மும்பை: 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையுடன் தொடர்புடைய பெஸ்ட்பேக்கரி வழக்கில் ஒரே சாட்சியான யாஸ்மின் ஷேக் திடீரென பல்டியடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் தீஸ்தாவின் தூண்டுதலால் தவறான சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கின் ஒரே சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

மும்பை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தண்டணை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மின், “அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் கூறியதன் பேரில் பொய் சாட்சியம் அளித்தேன்.

அவர் எனக்கு பணம் தருவதாகக் கூறினார். அதனால்தான் நிரபராதிகள் மீது குற்றம் சுமத்தி பொய் சாட்சியம் கூறினேன் என யாஸ்மின் கூறியுள்ளார்.மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய குஜராத் இனப்படுகொலை பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இவரது உறவினர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். எனினும் இவரது குடும்பத்தில் அனைவரும் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியளிக்கவில்லை. இவ்வழக்கில் கடைசிவரை பல்டியடிக்காமலிருந்த் ஒரே சாட்சி யாஸ்மின் ஷேக் ஆவார். ஷேக் குடும்பத்தில் இன்னொரு சாட்சியான ஷாஹிரா ஷேக் ஏற்கனவே தீஸ்தா பொய்கூற தூண்டுகிறார் என நீதிமன்றத்தில் சாட்சியளித்து பல்டியடித்திருந்தார்.

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின்போது பெஸ்ட் பேக்கரியில் அபயம் தேடிய 14 பேரை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக எரித்து கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ

pirajapathi
அஹ்மதாபாத்:துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது. சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது.பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்த சி.பி.ஐ ஐ.ஜி கந்தசாமி கூடுதல் விபரங்களை தெரிவிக்கவில்லை.

சொஹ்ரபுத்தீன் ஷேக் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரின் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இம்மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டது. பிரஜாபதியைன் தயார் நர்மதாபாய் தொடுத்த வழக்கை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

இரட்டைப் படுகொலைக்கு சாட்சியாக மாறியதால் தனது மகனை குஜராத் போலீஸ் சுட்டுக்கொன்றதாக நர்மதாபாய் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.சொஹ்ரபுத்தீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளான டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் பிரஜாபதி கொலை வழக்கிலும் குற்றவாளிகளாவர். இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு குஜராத் அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Friday, 29 April 2011

கிம் டேவியின் பேட்டியையடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

purulia arms drop
புரூலியா:புரூலியா ஆயுத மழை தொடர்பாக கிம் டேவியும், பீட்டர் ப்ளீச்சும் வெளியாக்கிய ரகசிய செய்திகள் இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியமாகும். புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டியது தொடர்பாக சில ஊகங்கள் நிலவின. இதுவெல்லாம் அரசு சமர்த்தாக பிரச்சாரம் செய்தவையாகும்.

பங்களாதேசுக்கு கொண்டுபோக விருந்த ஆயுதங்கள் தவறுதலாக புரூலியாவில் கொட்டப்பட்டதாக வதந்தி நிலவியது. பல்கேரியாவில் அரசு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 300 ஏ.கெ.47 துப்பாக்கிகள், 10 ராக்கெட் லாஞ்சர்கள், 100 பீரங்கி க்ரேனேடுகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் ஆகியவற்றை மரப்பெட்டியில் அடைத்து லாட்வியாவிலிருந்து ஆன்றோனோவ் விமானத்திலிருந்து மே.வங்க மாநிலம் புரூலியாவில் கொட்டப்பட்டது.

இரண்டாவது நாள் விமானம் நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்ததைத் தொடர்ந்து இந்திய விமான படை மிக் 21 விமானங்கள் உபயோகித்து வலுக்கட்டாயமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கியது. விமானத்திலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். டென்மார்க்கைஸ் சார்ந்த கிம் டேவி, பிரிட்டீஷ் ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், ஐந்து லாத்வியா நாட்டைஸ் சார்ந்த விமானப் பணியாளர்கள் ஆகியோர் அந்த விமானத்திலிருந்தனர்.

இதில் கிம் டேவி சமர்த்தாக தப்பிவிட்டார். ப்ளீச்சும் விமானப் பணியாளர்களும் கைதாகினர். 204 பெப்ருவரி 14-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப்ளீச், இந்திய குடியரசு தலைவர் மன்னிப்பு அளித்ததைத் தொடர்ந்து விடுதலைஸ் செய்யப்பட்டார்.விமாணப் பணியாளர்கள் முன்னரே விடுதலைஸ் செய்யப் பட்டுவிட்டனர்.

ப்ளீச்சை விடுதலை செய்த பிறகும், ஏன், விமானம் இந்தியாவிற்குள் நுழைந்தது? ரேடாரின் கண்ணில் படாமல் எவ்வாறு ஆயுதங்கள் கொட்ட முடிந்தது? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்காமல் மர்மம் நீடித்துவந்தது. இந்த கேள்விகளுக்கு கிம் டேவியின் பேட்டி பதிலாக அமைந்துள்ளது.

கிம் டேவியின் பேட்டி:

கராச்சியிலிருந்து எரிபொருளை ஏற்றிய விமானம் முதலில் வாராணாசியில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஏழு மணிநேரம் அங்கு விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் அரசிடமிருந்து இவ்விமானத்தை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும், இந்தியாவில் விமானம் பறப்பதற்கோ, தரையிறக்கி நிறுத்தவோ தடை விதிக்கப்படவில்லை.

வாரணாசியிலிருந்து விமானம் நேராக புரூலியாவிற்கு சென்று அங்கு வானிலிருந்து ஆயுதங்களை கொட்டியது. பின்னர் கொல்கத்தாவில் எரிபொருளை நிரப்பிய பிறகு தாய்லாந்து நாட்டின் புக்கட்டிற்கு சென்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு பிறகு கராச்சியை நோக்கி பறந்த விமானம் வங்காள விரிகுடா கடலில் மையங்கொண்ட புயல் காற்றுக் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இறக்கி எரிபொருளை நிரப்பியுள்ளது. அங்குவைத்து தான் இந்திய விமானப்படையின் கண்ணிற்கு பட்டுள்ளது இவ்விமானம். பின்னர் மும்பையில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டது.

நான் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படுவதற்கான வாய்ப்பு நிலவும் சூழலில் இந்த உண்மையை வெளியிடுகிறேன். நான் ஒரு பயங்கரவாதி அல்ல. கம்யூனிஸ்ட் அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றவே நான் இதனை செய்தேன்.

15 ஆண்டுகளாக நான் எவரிடம் கூறாத செய்திகள் தாம் இவை. தற்போது எனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெறும் வேளையில் என்னால் இந்த உண்மைகளை மறைக்க முடியவில்லை. மே.வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் பல வருடங்களாக தொடரும் கொலைகள், பாலியல் வன்புணர்வு ஆகியவற்றிலிருந்து மக்களை காப்பாற்றவே ஆயுதம் வழங்கினேன்.

எனது நண்பர்கள் என் முன்னால் கொல்லப்பட்டனர்.பலரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவையெல்லாம் என்னை ஆயுதங்களை புரூலியாவில் கொட்ட தூண்டியது. சித்தரவதைகளுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள எம்.பிக்கள் குடியரசு தலைவருக்கு புகார் அளித்தனர். ஒன்றும் நடக்கவில்லை.

இறுதியில் புரூலியாவில் நிரபராதிகளான மக்களை காப்பாற்ற மத்திய அரசு இத்தகையதொரு திட்டத்தை தயாரித்தது. உளவு நிறுவனங்களான ’ரா’ மூலமாக இத்திட்டத்தை மத்திய அரசு தயார் செய்தது. இதுத்தொடர்பாக ‘ரா’ மற்றும் பிரிட்டீஷ் உளவு அமைப்பான எம்.ஐ 5 உடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

திட்டம் அங்கீகரிக்கப்பட்டன. விமானம் ஆயுதங்களுடன் இந்தியாவிற்கு புறப்படும் வேளையில் யாரெல்லாம் விமானத்தில் இருக்கின்றார்கள் என்ற விபரம் வரை மத்திய அரசுக்கு தெரியும். திரிபுராவில் 1988 கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் கடத்தி போராட்டம் நடத்திய பொழுது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இங்கேயும் அதே திட்டத்தைத்தான் தீட்டினோம் இவ்வாறு கிம் டேவி கூறியுள்ளார்.

புரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது


புதுடெல்லி:1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.

இந்திய எல்லையை விட்டு வெளியேறிய இந்த விமானம் சில நாள்கள் கழித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது, இந்திய விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி மும்பையில் தரையிறங்க வைத்தனர்.

அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் பிளீச், டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டேவி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“ஆனந்த மார்க்கம்’ என்கிற அமைப்பு இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குற்றம்சாட்டவர்களில் சிலர் சுதந்திரமாக இருக்கின்றனர். சிலர் தலைமறைவாகிவிட்டனர்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிம் டேவி தொலைக்காட்சி ஒன்றுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், “இந்தப் பணியைச் செய்ததில் எம்.பி.ஒருவரே தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும், வேலை முடிந்ததும், அவரே தங்களை நேபாள எல்லையில் கொண்டுபோய் விட்டதாகவும்” கூறினார்.

மத்திய அரசு, இந்தியாவின் ரா உளவு அமைப்பு, பிரிட்டனின் எம்ஐ-5 உளவு அமைப்பு ஆகியவற்றுக்குத் தெரிந்தே இது நடந்ததாகவும், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராகப் போராடுவதற்காக மக்களுக்கு ஆயுதம் வழங்கவே விமானத்தில் இருந்து ஆயுதங்கள் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


weapons

Thursday, 28 April 2011

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்

Afghan-air-force-shooting-007
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால், எதற்காக துப்பாக்கியால் பைலட் சுட்டார் என்பது தெளிவாகவில்லை என நேட்டோ செய்தித் தொடர்பாளர் மேஜர் கிம் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதிதான் காபூல் விமானநிலையம். ஆனால், தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், ஏதேனும் போராளி இயக்கத்திற்கு இந்த சம்பவத்தில் பங்கிருப்பதாக தெளிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் தாலிபான் போராளிகள் பணியாற்றுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

ஆப்கானின் பாதுகாப்பு பொறுப்பை வெளிநாட்டு ராணுவத்தினர் ஆப்கான் படையினரிடம் ஒப்படைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ள சூழலில் இச்சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த போலீஸ்காரர் ஒருவர் ஆறு அமெரிக்க ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார். ஃபர்யாப் மாகாணத்தில் இம்மாதம் நான்காம் தேதி எல்லை காவல்துறையில் பணியாற்றிய அதிகாரியொருவர் இரண்டு நேட்டோ ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார்.

Wednesday, 27 April 2011

ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறவு தொடரும்-கலைஞர் மு.கருணாநிதி

MK
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெயரால் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் உறவை முறித்துக் கொள்ளமாட்டோம் எனவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 சென்னையில் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் மு.கருணாநிதி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகளும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழியை குற்றவாளியாக சேர்த்திருப்பது கவலைக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இவ்வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும், மகள் மற்றும் கட்சி நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என கருணாநிதி தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.

வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஜெயலலிதா அல்ல என தெரிவித்த கருணாநிதி,சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா?. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

யெமன் நாட்டில் சட்டத்தை மீறும் பிரச்சாரம் துவங்கியது

Jan11YemenProtests_452
ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி 2 மாதங்களை தாண்டியுள்ள மக்கள் எழுச்சிப்போராட்டம் புதிய வழிமுறைகளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இதன் ஒரு பகுதியாக சட்டத்தை மீறும் போராட்டத்தை நேற்று எதிர்ப்பாளர்கள் துவக்கியுள்ளனர்.

இப்போராட்டத்தில் 18 நகரங்கள் பங்கேற்கும் என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசங்களில் கடைகள் திறக்கவில்லை. பள்ளிக்கூடங்களும்,அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.இரண்டுவாரம் நீண்ட போராட்டமாக இது அமையும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி போராடும் மக்களின் கோரிக்கையை புறக்கணித்து ஆட்சியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹை கண்டித்து ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமாச்செய்துள்ளனர்.

அதேவேளையில், நேற்று யெமனின் பல இடங்களிலும் மோதல்கள் நடந்தேறின.ஏடனில் அரசு எதிர்ப்பாளர்களும், ராணுவமும் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

 டாங்குகளும், ஆயுதங்கள் நிரப்பிய வாகனங்களுடன் ராணுவத்தினர் வந்தனர்.அபியானில் ராணுவ பாதுகாப்பு முகாமை தாக்கிய ஆயுத ஏந்தியவர்கள் இரண்டு ராணுவத்தினரை கொலைச்செய்தனர்.

குவாண்டனாமோ:சிறைக்கைதிகளை சித்திரவதை- ஒத்துழைத்த அமெரிக்காவும், பிரிட்டனும்

kyantonoma
லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறைக்கைதிகளை சித்திரவதைச்செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் சி.ஐ.ஏவும், பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தைக்குறித்து பிரிட்டீஷ் அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


 இட்டுக்கட்டப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு குவாண்டானாமோ சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் தெரியும் என அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

விசாரணையில்லாமல் பல வருடங்களாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.சிறைக்கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களைக்கொண்டு கடிக்க வைத்தல், துணியால் கட்டப்பட்ட முகத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து மூச்சு திணறச்செய்தல் போன்ற சித்திரவதைகளை சிறைக்கைதிகள் சந்திக்கின்றனர்.

முன்னர் தாலிபானால் கைதுச்செய்யப்பட்ட பிரிட்டீஷ் குடிமகன் ஜமால் அல் ஹாரிதும் குவாண்டானாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சக கைதியைக்குறித்து ஆதாரங்களை சேகரிப்பதற்காக இன்னொரு பிரிட்டீஷ் குடிமகன் பின்யாம் முஹம்மது கைது செய்யப்பட்டுள்ளார்.

குவாண்டானாமோவில் நடக்கும் சம்பவங்களின் சிறியதொரு பகுதியை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது என சட்ட உதவிகள் வழங்கும் ரிப்ரீவின் இயக்குநர் க்ளிவ் ஸ்டாஃபோல்ட் ஸ்மித் கூறுகிறார். 172 சிறைக்கைதிகள் குவாண்டானாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம்னஸ்டி இண்டர்நேசனல் முன்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

ஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

CFI
கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச்செய்யப்படுவர்.கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.

நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள்.ஏகாதிபத்தியமும், ஃபாசிசமும், அரச பயங்கரவாதமும், கறுப்புச்சட்டங்களும் கொடூரத்தை வெளிக்கொணரும் வேளையில் அதனை திருத்தவேண்டிய பொறுப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என அனீஸ்ஸூர்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

எண்டோஸல்ஃபான்:தடைச்செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ டெல்லியில் தர்ணா


SDPI

புதுடெல்லி:எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச்செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேரளாவிலும், கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை   செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து    கொண்டோர் குற்றஞ்சாட்டினர். எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்யவேண்டுமென அவர்கள் கோரினர்.

74  நாடுகளில் தடை   செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான  பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டபோதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது.

எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய பிரதமர் முன்வர வேண்டும். தடைக்கான வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் உயிர்களை விட எண்டோஸல்ஃபான் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கும் லாபத்திற்கு மேற்கண்ட அமைச்சகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமருக்கு மனு அளித்தனர்.

இப்போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ டெல்லி கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான் துவக்கிவைத்தார். இப்போராட்டத்தில் அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ்சிங், எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில கன்வீனர் அன்ஸான் இந்தோரி, எஸ்.டி.பி.ஐ டெல்லி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்,கேரள மாநில பொதுச்செயலாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப்,இமாம்ஸ் கவுன்சில் உத்தரபிரதேச கன்வீனர் மெளலானா ஷஹ்தாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

ஆ.ராசா பிரதமரை தவறாக வழிநடத்தினார் – பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை

PMrajastorynew295
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. ஊழலில் பிரதமரை குற்றஞ்சாட்டாத அறிக்கையில் பிரதமரின் அலுவலகம் குறித்து கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல்புரிய ஆ.ராசாவுக்கு துணைபோகும் வகையில் பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது என அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரதமரை தவறாக புரியவைத்துள்ளார். ஊழலில் ஆ.ராசாவின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் உள்ளன எனக்கூறும் அறிக்கை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாத கேபினட் செயலாளரையும் குற்றஞ்சாட்டியுள்ளது.

காரியங்களை கவனமாக பரிசீலிக்காமல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாட்டாவின் பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாததுக் குறித்த முக்கிய ஆதாரமும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில்,ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழப்பீட்டின் உண்மையான கணக்கு விபரம் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறியது. இதனடிப்படையில் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீட்டைக் குறித்து பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரணை மேற்கொண்டது.

ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு தொலைத்தொடர்பு அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதை இவ்வறிக்கை எதிர்த்துள்ளது.

பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பிரதமர் அலுவலகம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் முன்கூட்டியே அறிந்துசொல்ல தவறிவிட்டதாகவும், அமைதியாக இருந்து நடந்த தவறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கருதவேண்டியுள்ளது.

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சில பிரச்சனைகள் குறித்து தனது உண்மையான கவலைகளையும், அதேவேளையில் சில ஆலோசனைகளையும் தெரிவித்து 2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சராகயிருந்த ஆ.ராசா அலட்சியப்படுத்திவிட்டார் என அவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

பொதுக்கணக்குக் குழுவின் கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி முடிவடைவதால் வரைவு அறிக்கை மட்டும் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன தலைவரான பா.ஜ.கவின் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்டதற்கு பொதுக்கணக்கு குழுவின் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்

 
suliemanதாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.

2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் சிறையிலடைக்கப்பட்டார். முதல் 7 மாதங்கள் குர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுலைமான் பின்னர் தாயிஃப் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த தாயிஃப் நீதிமன்றம் சுலைமான் 675,000 ரியால் ஈட்டுத் தொகையை கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இல்லையெனில், பணத்தை கட்டும்வரை சிறையிலடைக்கப்படுவார் எனவும் தெரிவித்தது.

சுலைமானோ ஏழ்மையானவர். இந்த பெருந்தொகைக்கு எங்கு செல்வார் அவர். அவருடைய ஸ்பான்சர் தன்னால் உதவமுடியாது என்று கூறிவிட்டார். மேலும் சுலைமான் 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சந்திக்கவும் இல்லை.

இந்நிலையில் வெளிநாட்டு இந்தியர்களின் நலனுக்காக பாடுபடும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் தாயிஃப் கிளை சுலைமானுக்கு உதவ முன்வந்தது. சவூதி அரேபியாவின் இதர பகுதிகளில் செயல்படும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் கிளைகளுடனும், ஜித்தாவில் இந்திய தூதரகத்தின் நல்வாழ்வு பிரிவுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டது தாயிஃப் ஃபெடர்னிடி ஃபாரம். அத்துடன் ஃபெடர்னிடி ஃபாரம் இந்தியாவில் கஷ்டப்படும் சுலைமானின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் அளித்துவந்தது. சுலைமானை விடுவிப்பதற்காக நம்பிக்கை இழக்காமல் ஒவ்வொரு கதவாக தட்டத் துவங்கியது ஃபெடர்னிடி ஃபாரம்.

காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி 675,000 ரியால் இழப்பீட்டுத் தொகையை வழங்க சம்மதிக்க வைத்தது. காப்பீட்டு நிறுவனம் அளித்த காசோலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு சுலைமான் கடந்த 25/04/2011 அன்று விடுதலைச் செய்யப்பட்டார்.

இதுத்தொடர்பாக இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் ரஃபீக் கூறியதாவது: ”நாங்கள் துவக்கத்தில் இவ்வழக்கின் பின்னணியை புரிந்துக்கொண்டோம். சுலைமானின் குடும்பத்தின் அன்றாட தேவைக்கான உதவிகளை அனுப்பி வைத்தோம். ஈட்டுத் தொகைக்காக விபத்துக்குள்ளான ட்ரக் காப்பீடுச் செய்யப்பட்டுள்ள நிறுவனம், ட்ரக்கின் உரிமையாளர் மற்றும் விபத்தில் கொல்லப்பட்ட சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.’ என தெரிவித்தார்.

காப்பீட்டு நிறுவனம், விபத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சவூதி அதிகாரிகளுடன் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்களான ரஃபீக், நவ்ஷாத், ஹுஸைன், அல்தாஃப், சுலைமான் ஆகியோர் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி சுலைமானின் விடுதலையை உறுதிச்செய்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான சுலைமான் கர்நாடகா மாநிலம் தெற்கு கன்னட மாவட்டத்தில் புத்தூர் தாலுகாவில் நெல்யாடி கிராமத்தைச் சார்ந்தவராவார். இவரது உழைப்பை நம்பி தாய், மனைவி, இரண்டு ஆண் மக்கள், மூன்று பெண் மக்கள் உள்ளனர். சுலைமான் 25 ஆண்டுகளாக சவூதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் இதைப்போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிகளை சவூதியில் சிரமத்திற்கும், சிக்கலுக்கு உள்ளாகும் இந்தியர்களுக்காக புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வலியுறுத்துகிறார் நிதின் கட்காரி

gadkari
அயோத்தி:பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது.

அவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களின் மசூதியை கட்டவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

ரமார் கோவிலைக் கட்டும் இந்த முடிவானது பைஜாபாத் கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தால் எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்தவித அரசியல் நோக்கும் இல்லை என்றும்  கட்காரி தெரிவித்தார்.

கட்காரியுடன், பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களான உத்திர பிரதேச தேர்தல் அமைப்பின் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, தேசிய துணை தலைவர் வினை கடியார், பாரதிய ஜனதாவின் உத்திர பிரதேச தலைவர் சூர்யா பிரதாப் சஹி மற்றும் அப்பகுதியின் எம்.எல்.எ லாலு சிங் ஆகியோரும் அயோத்தியை பார்வையிட்டனர்.

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்

france prayer
பாரிஸ்:பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.

இவரது இந்தக் கருத்தையொட்டி, ஒருபுறம் முஸ்லிம் மக்கள் பொது இடங்களில் தொழுவதற்கு அனுமதியும் உண்டு என்றும் வாதிடுகின்றனர்.அதே நேரத்தில்  மறுபுறம் பிரான்ஸ் மக்கள், பொது இடங்களை தொழுகை என்ற பெயரில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதோடு நாங்கள் எல்லை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கருத்துக்கள் வெளியாவதை பிரெஞ்சின் சட்டமியற்றுனர் ஆக்ஸல்  அர்ஜின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பியாவிலே பிரான்சில் தான் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகாமாக உள்ளது. ஆனால் அவர்கள் தொழுவதர்க்கான மசூதி ஒன்று மட்டுமே உள்ளது, வெள்ளிகிழமை தொழுகைக்கு இடப் பற்றாக்குறையால் அவர்கள் தெருவில் தொழும் நிலை உள்ளது,  நாங்கள் தெருவில் தொழுகிறோம் என்றால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் மூஸா நியம்பேலே தெரிவித்துள்ளார்.

1905-ல் பிரெஞ்சு அரசியல்வாதிகள் தெரிவித்தக் காரணம் நாட்டின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், உரிமையியல் மாநகர தலைவரும் அதற்க்கான அனுமதியை மறுத்து விட்டார் என்பதையும் நினைவு படுத்தினார். வரி கட்டும் முஸ்லிம்களால், தங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத மசூதியை கட்ட அரசாங்கத்திற்கு உதவ முடியாதா என்றும்,. இப்பொழுது பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் கட்டப்பட்டு கொண்டு இருக்கும் இந்த மசூதியும் பற்றாகுறையாகவே இருக்கும் என்றும் பலரால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் இனப்படுகொலை:பிரதீப் சர்மா, சஞ்ஜீவ் பட் குற்றச்சாட்டுக்கு ஆதரவு

kuldeep sarma
கட்ஸ்:குஜராத் கலவரத்தின் போது கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து தொலை பேசி வந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவிடம் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். பிரதீப் சர்மாவின் புகார் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இப்போது நில ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார்.

இவரது சகோதரர் குல்தீப் சர்மா ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது அஹமதாபாத்தில் காவல்துறை ஐ.ஜி.யாக குல்தீப் சர்மா இருந்தார். அப்போது முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து, ஒரு அதிகாரி என்னை போனில் தொடர்பு  கொண்டார். கலவரம் நடக்கும் சமயத்தில் அஹமதாபாத்தில் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என, என் சகோதரரிடம் தெரிவிக்கும்படி அவர் கூறினார்.

இச்செய்தியை சிறையிலிருந்து கடித்தின் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அவர் எழுத்துவடிவில் தெரிவித்திருக்கிறார். முதல்வர் அலுவலகத்தில்  இருந்து எனக்கு போன் செய்த அதிகாரி யார் என்பதை, சிறப்பு புலனாய்வு  குழுவிடம் தெரிவிக்க தயாராக உள்ளேன் என்றும் கடிதத்தில் பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் சஞ்சய் பட், தான் சிறப்பு புலனாய்வு  குழுவிடம் கூறியது மோடி அரசுக்கு கசிந்ததால் தனக்கு அச்சுறுத்தல் வருவதாக கூறினார்.மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்ட சோராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தவரும் சுல்தீபே ஆவார்.

உல்பா அமைப்பினர்களுக்கு மத்திய அரசு உதவி

ulfa
புதுடில்லி:உல்பா அமைப்பின் செலவிற்காக மத்திய அரசு தினமும் ரூ.40 லட்சம் வழங்குகிறது.உல்பா அமைப்பினரின் அன்றாட செலவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உல்பா அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 400 பேரின் தேவைகளுக்காக அசாம் மாநில அரசின் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்பான உல்பாவிற்காக மேலும் பல நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்க உள்ளது. ஜனவரி மாதம் முதல் முறையாக உல்பா அமைப்பு தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

உல்பா தலைவர்கள் மற்றும் மத்திய அரசு உடனான அடுத்தக்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜூன் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய மற்றும் மாநில அரசு, உல்பா அமைப்பினர்களுக்கு நலப்பாரி மாவட்டத்தில் நிலம் வழங்க ஒப்பு கொண்டுள்ளது.

இஷ்ராத் ஜஹான் வழக்கு குஜராத்தின் 14 மூத்த காவலதிகாரிகள் கூட்டு

Gujarat_Riots_lnk
அஹ்மதாபாத்:இஷ்ராத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்தில் பதினான்கு ஐ.பி.ஸ் அதிகாரிகளுக்குள்  பொறாமை மற்றும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இவ்வழக்கை சி.பி.ஐ அல்லது சிறப்பு புழனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

ஐ.ஜி சதீஸ் வர்மா மற்றும் ஐ.பி.ஸ் அதிகாரி ஜி,எல்.சிங்கால் உள்ளிட்ட பதினான்கு அதிகாரிகள் மூத்த அதிகாரிகளுடன் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர். இஷ்ராத் ஜஹான் என்கவுன்டரின் போது சதீஸ் வர்மா சிறப்பு  புழனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

குஜராத் உயர்நீதி மன்றம் தற்போது சதீஸ் வர்மாவுக்கு இஷ்ராத் ஜஹான் வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும்  வழங்கியிருந்தது. மேலும் குஜராத் ஐ.பி.ஸ் அதிகாரி மோகன் ஜஹா நிர்வாக பொறுப்பு வகிப்பார் எனவும் கூறியிருந்தது. சிறப்பு  புழனாய்வு குழுவின் தலைவர் கர்னைல் சிங் தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே.பி-யின் பார்வையில் காந்திஜி தேசபிதா அல்ல-ஜெயபால் ரெட்டி

jeyapal reddy
மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி பிஜேபி மகாத்மா காந்தியை தேச பிதாவாக ஏற்றுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இன்றளவும் பிஜேபி காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதற்கு பிஜேபி தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முன்னால் முதலமைச்சர் ஹேமாவதியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு மதம் மற்றும் சாதீய அரசியலின் சவால்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் உலகம் முழுவதும் மகாத்மா காந்தியை சிறந்த ஒழுக்கமுடையவராகவும் அரசியல் தலைவராகவும் அங்கீகரித்துள்ளனர்.

காந்தி அவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஒப்புயர்வற்ற தலைவராக திகழ்ந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் தேச தந்தை என்று அழைக்கபட்டவர். ஆனால் ஹிந்துத்வ R .S .S . அமைப்போ சுதந்திர போராட்டத்தின் போதும்  ஹிந்து ராஷ்ட்ரியம் வேண்டும் என்று கேட்டவர்கள்.

1939 ஆம் ஆண்டு எம்.எஸ். கோல்வல்கர் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டும் தான் அனைத்து உரிமைகளும் உண்டு இந்து அல்லாத பிற மதத்தவருக்கு இங்கு சம உரிமை இல்லை என எழுதியிருந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் ஜெயபால் கூறியதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவினையை R .S .S .அமைப்பும் ஆதரித்தது. ஆனால் காந்தியையும் நேஹ்ருவையும் இதில் குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனர் எனக் கூறினார்.

மேலும் பல வருடங்களாக பிஜேபி யும் R .S .S ம்  ராபின்தரநாத் தாகூர் எழுதிய ஜன கன மனவை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்துள்ளனர் எனக் கூறினார். தில்லியிலும் உத்திர பிரதேசத்திலும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது மிகவும் துரதிஷ்ட வசமானது என கூறினார்.

Tuesday, 26 April 2011

கறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்

black money
புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன. உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மிகப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் நிச்சயம் இருக்கும் என்று கூறிய அவர், ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள தனியார் வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த அளவுக்குப் பணத்தைப் போடுபவர் சாதாரண இந்தியராக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, நம்பிக்கை இழக்காமலிருங்கள், பட்டியல் நிச்சயம் வெளியிடப்படும் என்றார். இருப்பினும் இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

 ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தவிர வேறு எவரும் பணத்தை முதலீடு செய்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். ஊழல் முறைகேடுகளை விட மோசமானது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைப்பது என அஸாஞ்ச் குறிப்பிட்டார்.

டெல்லி,மும்பை விமானநிலையங்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை

pay here
புதுடெல்லி: டெல்லி , மும்பை விமானநிலையங்களில் வளர்ச்சித் திட்டத்தின் பெயரால் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கன்ஸ்யூமர் ஆன்லைன் ஃபவுண்டேசன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

முன்னர் விமான நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தான் நீதிபதிகளான ஸிரியக் ஜோஷப், எ.கெ.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்துள்ளது.

டெல்லி விமானநிலையத்தில் உள்நாட்டு பயணிகளிடம் ரூபாய் 200, வெளிநாட்டுக்கு செல்வோரிடம் ரூபாய் 1300 வசூலிக்கப்பட்டுவந்தது.மும்பை விமானநிலையத்தில் ரூ.100 உள்நாட்டு பயணிகளிடமும், ரூ.600 வெளிநாட்டுக்கு செல்வோரிடமும் வசூலிக்கப்பட்டுவந்தன.

தனியார் நிறுவனங்களான டெல்லி இண்டர்நேசனல் ஏர்போர்ட் லிமிட்டட், மும்பை இண்டர்நேசனல் ஏர்போர்ட் லிமிட்டட் ஆகியன பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலித்துவருகின்றன. இவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

சாயிபாபாவின் உதவியாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

sathyajith
புட்டபர்த்தி(ஆந்திரபிரதேசம்): சாயிபாபாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் சத்யஜித்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. சத்யஜித்தின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சத்யஜித்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாயிபாபாவுக்கு போதுமான உணவு வழங்கவில்லை எனவும், அதிகமாக வேதனஸம்ஹாரி அளித்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சாயிபாபாவின் உடல்நலம் சீர்கெட அதுதான் காரணம் என போலீஸ் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

ஆனால், சாயிபாபாவை மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு முன்பு வேதனஸம்ஹாரி வழங்கியதை உறுதிச்செய்யவோ, மறுக்கவோ அவருக்கு சிகிட்சையளித்த சத்யசாய் இன்ஸ்ட்யூட் ஆஃப் ஹயர் மெடிக்கல் சயன்ஸில் மருத்துவர்கள் தயாரில்லை. சத்யசாய் அறக்கட்டளைக்காக செயலாளர் கெ.சக்ரவர்த்தியுடன் கையெழுத்திட அதிகாரமுடைய நபர்தான் தமிழ்நாட்டை சார்ந்த சத்யஜித்.

ஆசிரமத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் சத்யஜித்திடம் பகைமை பாராட்டுபவர்கள் உண்டு எனவும், சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து சத்யஜித்தை கொல்ல முயற்சி நடக்கலாம் எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமை சாயிபாபாவின் இறந்த உடலுக்கு அருகில் சத்யஜித் சிறிது நேரமே இருந்தார்.

தனது அறையில்தான் அவர் பெரும்பாலும் செலவிட்டார். சாயிபாபாவின் இறுதிஸ் சடங்குகள் முடியும்வரை பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருக்க சத்யஜித்திடம் கூறப்பட்டுள்ளது.

இனப்படுகொலை குறித்த தொலைபேசி ஆவணங்கள்:விசாரணைக்கோரிக்கை தள்ளுபடி

phone
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்குமிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சி.டியைக்குறித்து விசாரணை நடத்தவேண்டுமென கோரி சமர்ப்பித்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. 2002-ஆம் ஆண்டு குல்பர்க் சொசைட்டியில் நடந்த கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் இம்மனுவை சமர்ப்பித்தனர்.

எஸ்.ஐ.டி வழக்கை விசாரிப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாகவும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பி.ஜெ.தந்தா தெரிவித்தார். குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்துள்ளது.

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புக்கொண்டிருந்தவர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.எம்.ஓரா வாதிட்டார்.2002-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மா தயாராக்கிய சி.டியில் குறிப்பிடப்படும் 27 நபர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை பதிவுச்செய்ய எஸ்.ஐ.டிக்கு உத்தரவிடவேண்டும் என ஓரா கோரிக்கை விடுத்தார்.

இவர்களின் வாக்குமூலங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்யவேண்டுமென அவர் வலியுறுத்தினார். ஆனால் ஓராவின் வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஸி.கோடேகர் எதிர்த்தார். இதர நபர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை பதிவுஸ் செய்வது இக்கட்டத்தில் முக்கியத்துவம் இல்லை என அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடிச்செய்தது.

அரசியல் சட்டம் திருக்குர்ஆனின் அடிப்படையில் அமையவேண்டும்-எகிப்து நாட்டு மக்கள் விருப்பம்

கெய்ரோ:எகிப்தில் இயற்றப்படவிருக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை திருக்குர்ஆனாக இருக்கவேண்டும் என பெரும்பாலான எகிப்தியர்களும் வலியுறுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசு அமையவேண்டும் என எகிப்து நாட்டு மக்கள் விரும்புகின்றார்கள்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ப்யூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இச்செய்தினை அஸோஸியேட் ப்ரஸ் வெளியிட்டுள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவாக 32 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டுமென 54 சதவீத எகிப்து நாட்டு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மீதும், அந்நாட்டு அதிபர் ஒபாமா மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 64 சதவீத எகிப்திய மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடை பெறவிருக்கவே இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன. எகிப்தின் பல்வேறு பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏழு அமெரிக்க எண்ணெய் டாங்கர்களை தீவைத்துக் கொளுத்தியது தாலிபான்

oil tank attack
காபூல்:ஆப்கானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏழு எண்ணெய் டாங்கர்களை தாலிபான் போராளிகள் தீவைத்துக் கொளுத்தினர். ரோஸாவில் வைத்து டாங்கர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் தாலிபான்கள். வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.

இத்தாக்குதலுக்கு பின்னணியில் போராளிகள் செயல்பட்டுள்ளதாக மாகாண போலீஸ் அதிகாரி ஸொராவர் ஷாஹித் தெரிவித்துள்ளார்.தாக்குதல் நடந்த பிரதேசத்தை போலீஸ் சுற்றிவளைத்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைதுச்செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடல் வழியாக பாகிஸ்தானின் கராச்சிக்கு வரும் நேட்டோ படையினருக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தரை மார்க்கமாக ஆப்கானுக்கு கொண்டுசெல்லப்படுவது வழக்கம்.நேட்டோ வாகனங்கள் மீது தாக்குதல் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது

சிரியா:ராணுவத்தின் அட்டூழியம் தொடர்கிறது

syria protest
டமாஸ்கஸ்:சிரியாவில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வரும் ராணுவம் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 பேர் கைதுச்செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் டாங்கர்களிலும், வாகனங்களிலும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பிரதேசங்களில் முகாமிட்டனர். மின்சாரம்-தொலைபேசி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பிறகு ராணுவம் எதிர்ப்பாளர்களை சுற்றி வளைத்தது. ஆனால், நேற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ்ஸாருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தேறின.

பெரும்பாலான இடங்களில் ராணுவம் வீடுதோறும் சோதனைகள் நடத்திவருகிறது. பரிசோதனையின் போது உருவான மோதலிலும், துப்பாக்கிச்சூட்டிலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் எல்லாம் சாதாரண மக்கள் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவிதமான தகவல் தொடர்புகளையும் ராணுவம் துண்டித்து விட்டதால் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து உண்மையான புள்ளிவிபரங்கள் தெரியவில்லை என அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்ப்பாளர்களின் வலுவான பிரதேசமான தராவில் பலமுறை துப்பாக்கிச்சத்தமும், குண்டுவெடிப்பு சத்தங்களும் கேட்டதாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. சிரியாவின் மேற்கு பகுதியில் பல வீதிகளிலும் தற்போது இறந்த உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. இந்த உடல்களை மாற்றுவதற்கு எவராலும் இயலவில்லை என மனித உரிமை ஆர்வலரான ராமி அப்துற்றஹ்மான் தெரிவிக்கிறார். பாரபட்சமான ராணுவத்தின் நடவடிக்கை என பலரும் புகார் தெரிவித்ததாக வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அப்பாவி மக்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தும் ராணுவத்தின் நடவடிக்கையை அரபு லீக் கண்டித்துள்ளது. சிரியாவில் ராணுவம் நடத்திவரும் கொடூர மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கு கொண்டுவர பஸ்ஸாருல் ஆஸாதிற்கு உலக நாடுகள் நிர்பந்தம் அளித்துள்ளன.

மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

popular front
புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அதனால்தான், இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்ய எஸ்.ஐ.டி புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என நிரூபணமான என்டோ ஸல்ஃபான் கிருமிநாசினியை தடைச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென செயற்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

63 நாடுகளில் தடைச்செய்யப்பட்ட என்டோ ஸல்பான் 70 சதவீதம் இந்தியாவில் தான் தயாராகிறது.பெரும் கிருமி நாசினி நிறுவனங்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து என்டோஸல்பானை தடை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என கருதுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து தெரிவித்துள்ளது. என்டோஸல்பான் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கபளீகரிக்க வலதுசாரி ஹிந்துத்துவா குழுக்கள் நடத்தும் முயற்சியைக் குறித்து பாப்புலர் ப்ரண்ட் கவலை தெரிவித்துள்ளது. ஊழல்வாதிகளான ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் முயற்சிகள் குறித்து சமூக-கலாச்சார ஆர்வலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், முழுமையான லோக்பால் மசோதாவிற்கான முயற்சி தொடர வேண்டும் எனவும் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜய்தாப்பூரில் உள்ளூர் மக்களின் விருப்பத்தையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி அணுமின் நிலையம் நிர்மாணிக்க முயலும் அணுசக்தி துறைக்கு பாப்புலர் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உருவான சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுசக்தி விபத்தும் அணு உலைகள் மிகப்பெரிய ஆபத்தையும், அதிகமான செலவினத்தையும் கொண்டது என்பதை நிரூபித்துள்ளன.

இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை விளைவிப்பதாகும். பிரான்சில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படாத தொழில் நுட்பத்தை ஜய்தாப்பூர் அணுமின் நிலையத்தில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளார்கள். ரத்னகிரியில் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவிக்கிறது.

பாப்புலர் ப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மவ்லானா உஸ்மான் பேக், பேராசிரியர் பி.கோயா, யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, அனீஸ் அஹ்மத், இல்லியாஸ் தும்பெ, அஷ்ரஃப் மெளலவி, ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன், எ.எஸ்.இஸ்மாயீல் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது

sri-lanka-2
வாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் அனைத்து போர்விதிமுறைகளையும் இலங்கை அரசு மீறிவிட்டதாகவும்,போர் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டது எனவும் ஐ.நா அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி தமிழ் மக்களை கொலைச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் என்பவர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. முழுமையாக விசாரணை நடத்திய இக்குழுவினர் 214 பக்க அறிக்கையை ஐ.நாவிடம் அளித்தனர்.

பொதுமக்கள் வசிக்கும் இடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிவிலியன் பகுதிகளில் வேண்டுமென்றே குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரில் உபயோகிக்க தடைச் செய்யப்பட்ட குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தப்பி ஓட முயன்றவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்பினருமே பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இருந்துக் கொண்டே ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்ப் பெண்கள் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளனர். ஒரு லட்சம்பேரை காணவில்லை.

இலங்கை ராணுவமும்,விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறி போர் குற்றம் புரிந்துள்ளனர்.ஐ.நா அறிக்கை வெளியாகியுள்ள சூழலில் இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே! ஏனெனில் ஃபலஸ்தீனில் காஸ்ஸாவில் வாழும் அப்பாவி முஸ்லிம்கள் இஸ்ரேலிய சியோனிச அரசால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட பிறகு ஐ.நா நியமித்த கோல்ட் ஸ்டோன் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கோல்ட் ஸ்டோன் இஸ்ரேலுக்கு ஆதரவாக அண்மையில் பல்டியடித்தது குறிப்பிடத்தக்கது.