புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கடந்த ஆண்டு அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மேலும் 5 மனுக்களை தாக்கல் செய்யும்.
ஏற்கனவே வாரியம் 4 மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இன்று ஹைதரபாத் தாருல் உலூமில் நடைபெறவிருக்கும் வாரியத்தின் 51 உறுப்பினர்கள் அடங்கிய கொள்கை உருவாக்கக் கூட்டத்தில் இதுத்தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் ரஹீம் குரைஷி தெரிவித்துள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.77 ஏக்கர் நிலத்தை ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பங்கீடுச்செய்து அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தற்காலிக கோயிலை ஹிந்துக்களுக்கு விட்டுக்கொடுக்கவும் உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறியது.
இன்று துவங்கும் 2 நாள் கூட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவர் மெளலானா ஸய்யித் ராபிஃ ஹஸன் நத்வி தலைமை வகிப்பார். வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2010, மதரஸா சுயாட்சி ஆகிய விஷயங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
No comments:
Post a Comment