
புதுடில்லி:தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் தேதி பதவி ஏற்ற இவர் இந்தியாவின் 12 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவி வகித்தார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
அடுத்த ஆண்டு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?” என்று பிரதீபா பட்டீலிடம் நேற்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நான் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment