Sunday, 24 April 2011

ஹிந்துப் பத்திரிகை குடும்பத்தில் கலகம்: முதன்மை ஆசிரியர் மீது பெய்ட் நியூஸ், 2ஜி ஸ்பெக்டரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரபல ஆங்கில பத்திரிகையான ’ஹிந்து’ நாளிதழின் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கஸ்தூரி குடும்பத்தில் கலகம் வெடித்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியரின் பதவி பறிபோனது.

முதன்மை ஆசிரியர் என்.ராம் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுப்பியதைத் தொடர்ந்து  என்.ராமின் சகோதரர் என்.ரவியின் ஆசிரியர்(எடிட்டர்) பதவி பறிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசாவின் பேட்டியை முழுப்பக்கத்தில் வெளியிட்டு பத்திரிகையின் அந்தஸ்தை குலைத்துவிட்டதாக என்.ராம் மீது ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆ.ராசாவின் நேர்முகப்பேட்டி வெளியான தினத்தில் தொலைத் தொடர்புத்துறையின் முழுபக்க விளம்பரத்தை வெளியிட்டு பெய்ட் நியூஸ் (பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுதல்) கொள்கைக்கு எதிரான பத்திரிகையின் பிரகடனத்தை காற்றில் பறத்தியதாகவும் ரவி குற்றஞ்சாட்டுகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை-ரவி கூறுகிறார்.

என்.ராமின் இன்னொரு சகோதரரும் ’ஹிந்து’ பத்திரிகையின் மேலாண்மை இயக்குநருமான என்.முரளி மற்றும் சகோதரி மாலினி பார்த்தசாரதி ஆகியோரின் ஆதரவு ரவிக்கு உள்ளது. இதனால், மே 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஹிந்து பத்திரிகையின் இயக்குநர் போர்டு கூட்டம் நிர்ணாயகமாகும்.

ரவியை வெளியேற்றிவிட்டு டெல்லி பீரோ சீஃப் சித்தார்த் வரதராஜனை புதிய எடிட்டராக(ஆசிரியராக) கடந்த இயக்குநர் போர்டு நியமித்துள்ளது. இயக்குநர் போர்டு தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது எனக்கூறி என்.ராமிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களுடன் பத்திரிகை பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பி பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment