Wednesday, 20 April 2011

இஷ்ரத் ஜஹான்:3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

images
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உட்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற பெஞ்சின் உத்தரவின்படி ஐ.பி.எஸ் அதிகாரிகளான பி.பி.பாண்டே, ஜி.எல்.சிங்கால், எ.ஸி.பி.தருண் பாரோட் ஆகியோரை குஜராத் அரசு இடமாற்றம் செய்துள்ளது. இவர்களை இடமாற்றம் செய்ய இம்மாதம் எட்டாம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் இதுத் தொடர்பான உத்தரவை பிறப்பித்திருந்த போதிலும் மாநில அரசு அதனை நிறைவேற்றவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், பிராணேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஷீஷான் ஜோஹரே ஆகிய அப்பாவிகளை நரேந்திர மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் எனக்கூறி குஜராத் போலீஸ் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது.

இந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் நிகழும் பொழுது பாண்டே க்ரைம்ப்ராஞ்ச் தலைவராக பதவி வகித்தார். சிங்கால் க்ரைம்ப்ராஞ்ச் டி.ஸி.பியாகவும், பாரோட் க்ரைம்ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றினார். இவ்வழக்கில் இன்று விசாரணை நடைபெறவிருக்கும் வேளையில் இந்த இடமாற்ற உத்தரவை குஜராத் அரசு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment