
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஐந்து கார்ப்பரேட் அதிகாரிகளின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா,யுனிடெக் வயர்லெஸ் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் சந்திரா,ரிலையன்ஸ் எ.டி.எ.ஜியில் கவுதம் தோஷி, சுரேந்திர விசாரா, ஹரி நாயர் ஆகியோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி தள்ளுபடிச் செய்தார்.
ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்துபேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சி.பி.ஐயின் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள இவர்களை இதுவரை கைது செய்யவில்லை.
விசாரணை வேளையில் கைது செய்யவில்லை எனக்கூறி இவர்கள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜரானார்கள் என்ற காரணத்தினால் ஜாமீன் வழங்கவியலாது என சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடினார். இதனை கவனத்தில் கொண்ட நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது.
ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டதால் கார்ப்பரேட் அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படும். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் டெலிகாம் செயலாளர் சித்தார்த் பெஹ்ரா, ராசாவின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் ப்ரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment