Monday, 4 April 2011

பாகிஸ்தான்:சூஃபி தர்காவில் குண்டுவெடிப்பு-30 பேர் மரணம்

sufi darka blast
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் ஸாகி ஸர்வர் சூஃபி தர்காவில் நடந்த இரட்டைக்குண்டுவெடிப்பில் முப்பது பேர் கொல்லப்பட்டனர்.ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.இங்கு நடைபெறும் விழாவில்(உரூஸ்) கலந்துகொள்ளவந்த நபர்கள்தாம் பலியாகினர்.
இன்று மதிய வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.பாகிஸ்தானில் இதற்கு முன்பு சூஃபி மையங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.தாக்குதலை நடத்தியது தற்கொலைப்படையைச்சார்ந்த நபர் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment