
கடந்த 30ம் தேதி வழக்கம் போல் ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் நான்கு பேர் முகாம் திரும்பவில்லை. இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் நால்வர் மாயமாகினர்.
கடந்த 2ம் தேதி வழக்கம்போல் மீன்பிடிக்க சென்ற விக்டஸ், அந்தோணி, ஜான்பால், மாரிமுத்து ஆகியோர் நேற்று மாலை வரை கரை திரும்பாத நிலையில், உறவினர்கள் பதட்டத்தில் உள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் படகில் சென்ற இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பாதது குறித்து புலனாய்வு துறையினரும் விசாரித்து வரும் நிலையில், படகில் சென்றவர்கள் கடத்தி செல்லப்பட்டார்களா என்ற அச்சமும் மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment