
வாஷிங்டன்:செலவு குறைவு என்பதற்காக இந்தியாவிற்கு சென்று சிகிட்சை மேற்கொள்ள தேவையில்லை என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா அறிவுரை கூறியுள்ளார்.
அமெரிக்க ஆரோக்கியத்துறையில் அதிகரித்துவரும் கட்டண உயர்வைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு மருத்துவ சிகிட்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில் ஒபாமா இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறைந்த செலவில் தரம் வாய்ந்த சிகிட்சை வசதி அமெரிக்காவில் கிடைக்க வேண்டுமென தான் விரும்புவதாக கூறியுள்ள ஒபாமா, அமெரிக்க குடிமக்கள் இதற்காக இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு செல்வதை தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
வெர்ஜீனியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுகையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் அமெரிக்காவில் அதிகரித்துவரும் சிகிட்சைக் கட்டணத்தைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் ஆரோக்கிய துறையில் சீர்திருத்த முயற்சிகளுக்கு அமெரிக்க மக்கள் ஒத்துழைப்பை தரவேண்டும். இதர நாடுகளை விட கூடுதல் கட்டணம் வழங்கி அமெரிக்காவில் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று அமெரிக்க குடிமக்கள் கருதிவிடக்கூடாது என ஒபாமா தெரிவித்தார்.
No comments:
Post a Comment