
மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீண்டகால முற்றுகையால் சுமுக வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களின் துயர் துடைக்குமுகமாக நிவாரண உதவிப் பொருட்களைச் சுமந்துசென்ற ஃப்ரீடம் ஃபுளோடில்லா, மாவி மர்மரா ஆகிய கப்பல்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலானது சர்வதேச சட்டத்துக்கும் மானிட விழுமியங்களுக்கும் முற்றிலும் எதிரானதாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "கடந்த வாரம் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களை எடுத்துச் சென்ற மலேஷியக் கப்பலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படை சர்வதேச கடற்பரப்புக்குள் வைத்து வழிமறித்துத் தாக்கியுள்ளது. இதேபோல ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 கப்பல்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகலாம்" எனத் தாம் கருதுவதாகவும் மேற்படி அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடம் மே மாதத்தில் ஃப்ரீடம் ஃபுளோடில்லா கப்பல்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் சமாதானச் செயற்பாட்டாளர்கள் 9 பேர் படுகொலை செய்யப்பட்டு மற்றும் பலர் படுகாயமுற்ற துர்ப்பாக்கிய நிகழ்வும் மேற்படி அறிக்கையில் நினைவுகூறப்பட்டிருந்தது.
சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக கடுமையான முற்றுகைக்குள்ளாகியிருக்கும் காஸா மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 நிவாரணக் கப்பல்கள் அடுத்த மாதம் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது..
No comments:
Post a Comment