மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாவது ஆண்டு துவங்குவதை கொண்டாட, பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதில்லை என திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைமையில், மத்தியில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாவது ஆண்டு துவங்குவதையொட்டி, காங்கிரஸ் கட்சி இன்று ஞாயிறு, பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக இதில் கலந்துகொள்ளும் எனத் தெரிவித்திருந்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் வீட்டு விருந்தில் திமுக கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருபதாக திமுக தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக பெரும் சோதனைகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், பிரதமர் வீட்டு விருந்தில் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment