Wednesday, 18 May 2011

அமெரிக்க நாவல் ஆசிரியருக்கு "மேன் புக்கர்' விருது!!

மேன் புக்கர் சர்வதேச விருதுக்கு அமெரிக்க நாவலாசிரியர் பிலிப் ரோத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இந்த விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான எழுத்தாளர் ராபின்டன் உள்பட 12 எழுத்தாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இதில் பிலிப் ரோத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதைப் பெறும் நான்காவது எழுத்தாளர் இவர்.உலக அளவில் சிறந்த அம்சமுள்ள நாவல்களை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

2005ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தவிருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரிய பரிசுத் தொகையாக 44 லட்சம் வழங்கப்படும்

No comments:

Post a Comment