Sunday, 1 May 2011

புரூலியா:நீதிவிசாரணை நடத்தவேண்டும் பிரதமருக்கு இடதுசாரிகள் கோரிக்கை

arms_drop
புதுடெல்லி:மே.வங்க மாநிலம் புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதிவிசாரணை நடத்தவேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இடதுசாரிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுத்தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் ஆகியோர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.இதுத்தொடர்பாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம்             விமானங்களில்                      இருந்து ஆயுதங்கள் போடப்பட்டன.

 இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நிலேஸ் நெல்சன் என்ற கிம்டேவி மற்றும் பீட்டர் பிளீச் ஆகியோர், ஆயுதங்கள் போடப்பட்ட சம்பவம் தொடர்பாக சில தவல்களை ஊடகங்கள் வாயிலாக அண்மையில் வெளியிட்டுள்ளனர். இச் சதி எவ்வாறு திட்டமிடப்பட்டது. யார்-யார் இதில் தொடர்புடையவர்கள் என்பதையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தச்சூழ்நிலையில் ஆயுதங்கள் போடப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை தேவை. எனவே தற்போது பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என நாங்கள் உங்களை (பிரதமர்) கேட்டுக் கொள்கிறோம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிம் டேவியை டென்மார்க் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக சில முக்கியத் தகவல்களை கிம்டேவி வெளியிட்டுள்ளார். குறிப்பாக புரூலியாவில் ஆயுதங்களைப்போட்ட விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டபோது அந்த விமான நிலையத்திலிருந்து தப்பிக்க கிம்டேவிக்கு யார் உதவி செய்தார்கள் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை சாதாரணமாக விட்டுவிட முடியது. மேலும் அப்போதைய மேற்கு வங்க அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட நடத்தப்பட்ட சதிச் செயல் இது. மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆனந்த மார்க் என்ற இயக்கத்திற்கு இதில் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுபற்றி எல்லாம் தெளிவுபடுத்த நீதிவிசாரணை அவசியம் என அதில் காரத்தும்,பரதனும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment